ருத்ரதாண்டவம் படத்தை தடை செய்து மோகன்.ஜி யை கைது செய்யுங்கள்... போலீஸ் கமிஷனரிடம் பேராயர் மனு..!
இந்தப்படம் மதக்கலவரத்தை தூண்டும் எனவும் ஆகையால் படத்தை தடை செய்து இயக்குநரை கைது செய்ய வேண்டும் என சிறுபான்மை நலக் கட்சியின் வலியுறுத்தி உள்ளனர்.
மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதண்டவம் பட ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தப்படம் மதக்கலவரத்தை தூண்டும் எனவும் ஆகையால் படத்தை தடை செய்து இயக்குநரை கைது செய்ய வேண்டும் என சிறுபான்மை நலக் கட்சியின் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். அதில், ‘’ருத்ரதாண்டவம் பட ட்ரெய்லரில் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும்படியாக மதக்கலவரத்தை தூண்டும்படியாக உள்ளது. திரைப்படத்தை இயக்கிய மோகன்ன் ஜி என்பவரை கைது செய்ய வேண்டும். தமிழக அரசு இந்தப்படத்தை உடனே த்டை செய்ய வேண்டும்’’என பேராயரும், சிறுபான்மை நல கட்சியின் தேசிய தலைவருமான சாம் ஏசுதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.