Asianet News TamilAsianet News Tamil

திமுக பொதுக்குழு கூட்டத்தில் திடீரென வெளியேறிய ஆற்காடு வீராசாமி..! பரபரப்பான கூட்ட அரங்கம்..!

திமுக முதன் முறையாக இணையதளவசதிகள் மூலம் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது.இதில் கலந்துகொண்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூட்டத்தில் இருந்து திடீரென எழுந்து சென்றது பரபரப்பானது.
 

Arcot Veerasamy abruptly leaves DMK general body meeting ..! Exciting meeting hall ..!
Author
Tamilnadu, First Published Sep 9, 2020, 10:16 PM IST


திமுக முதன் முறையாக இணையதளவசதிகள் மூலம் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது.இதில் கலந்துகொண்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூட்டத்தில் இருந்து திடீரென எழுந்து சென்றது பரபரப்பானது.

Arcot Veerasamy abruptly leaves DMK general body meeting ..! Exciting meeting hall ..!

கொரோனா காரணமாக மார்ச் மாதம் நடைபெற இருந்த திமுகவின் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்துக்கு மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் கட்சியின் பொருளாளருமான ஆற்காடு வீராசாமி அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தார். சமீப காலமாக உடல்நிலை சரியில்லாததால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். எனினும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றதை அடுத்து அறிவாலயம் வந்த ஆற்காட்டார், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. 

Arcot Veerasamy abruptly leaves DMK general body meeting ..! Exciting meeting hall ..!


அதன்பிறகு ஒரு வருடம் கழித்து இன்றுதான் அறிவாலயம் வந்திருக்கிறார். நடப்பதற்கே மிகுந்த சிரமப்பட்டு மெதுவாக விழா நடந்த இடத்துக்கு வந்தவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால் காலை 11 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி அரங்கில் எழுந்துவிட்டார்.
 இதுதொடர்பாக விசாரிக்கையில், விழா நடந்த அரங்கம் முழுக்க ஏசி வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த ஏசியால் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டு இருந்தவர் அரங்கில் இருந்து வெளியேறினார். கொரோனா நேரத்தில் ஏசி பயன்படுத்தக்கூடாது என்று அரசு அறிவித்திருந்தாலும் இவரது உடலுக்கு ஏசி ஒத்துவரவில்லை. இதனால்  நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாமலும், மூச்சு விடுவதில் சிரமப்பப்பட்டதை அடுத்து வீட்டிற்கு செல்வதாக கூறி பொதுக் குழுவில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார் ஆற்காடு வீராசாமி.

Follow Us:
Download App:
  • android
  • ios