Asianet News TamilAsianet News Tamil

இனிமேல் இப்படித்தான்… அதிமுக-வை நிரந்தரமாக கழட்டிவிடும் பாமக.- அன்புமணி அதிரடி பேட்டி.!

தமிழ்நாட்டை பாமக ஆட்சி செய்ய தொடங்கிவிட்டது. கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை.

Anbumani ramados on admk allaince
Author
Chengalpattu, First Published Oct 1, 2021, 7:22 PM IST

தமிழ்நாட்டை பாமக ஆட்சி செய்ய தொடங்கிவிட்டது. கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக கூட்டணியிலும் சலசலப்பு அதிகரித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சி தேர்தலில் தணித்து போட்டியிடும் பா.ம.க. வரும் காலங்களிலும் அதே நிலையை தொடர முடிவு செய்துள்ளது.

Anbumani ramados on admk allaince

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தொண்டர்கள் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தணித்து போட்டியிடும் என்று கூறினார். தமிழ்நாட்டை தற்போது பாமக ஆட்சி செய்ய தொடங்கிவிட்டதாக கூறியுள்ள அன்புமணி, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து கோட்டையை கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Anbumani ramados on admk allaince

கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக-வுக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படாததால் ஒன்பது மாவட்ட தேர்தலில் தணித்து போட்டியிடுவதாக அன்புமணி கூறியிருக்கிறார். அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையை பாமக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள அன்புமணி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக நீடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios