Rose to 18 thousand liters of diesel subsidy for fishermen.

தமிழக அரசின் 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மீனவர்களுக்கான டீசல் மானியம் 18 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும், மீன்பிடி தடை காலத்தில், ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* மீனவர்களுக்கான மானிய டீசல் 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு
* விலையில்லா கால்நடை வழங்க ரூ.182 கோடி
* நெல்லுக்கு கூடுதல் ஆதார விலை வழங்க ரூ.200 கோடி
* ஆவின் பொருட்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்
* நெல்லுக்கு கூடுதல் ஆதார விலை வழங்க ரூ.200 கோடி
* விலையில்லா கால்நடை வழங்க ரூ.182 கோடி
* 35 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி
* மீன்வளத்துறை க்கு 860 கோடி
* ரேஷன் கடையில் மானிய விலையில் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும்
* கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.875லிருந்து ரூ.1000 ஆக உயர்வு.
* மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித்தொகை ரூ.5000 வழங்கப்படும்.
* காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டுமாடுகளை பாதுகாக்க அரசு நிதிஉதவி வழங்கும்.
* கடல் அரிப்பை தடுக்க ரூ.20 கோடியில் திட்டம்
* இயந்திர மீன்பிடி படகுகளுக்கு வழங்கும் டீசல் 18 ஆயிரம் லிட்டராக உயர்வு
இதன் மூலம், அரசுக்கு கடன் சுமை ரூ.1 லட்சம் கோடி அதிகரிப்பு ஏற்படும். நிதி பற்றாக்குறை ரூ.41 ஆயிரம் கோடி உள்ளது என நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred