தினகரன் சேப்டர் குளோஸ்.. அதிமுகவுக்கு வந்தால் அமமுவினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.. அட்ராசிட்டி செய்யும் RB.!
அந்த 43 தொகுதிகளையும் சேர்த்து 1.98 லட்சம் வாக்குகள் மட்டும் கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றது. அதிமுகவினர் சோர்வடையாமல் உழைத்திருந்தால், 1.98 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். அப்படி பெற்றிருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி அமர்ந்திருப்பார்.
அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் அதிமுகவில் தான் சேர்ந்திருக்க வேண்டும். எதற்காக திமுகவில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை திருமங்கலம் அருகே ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஜெ.பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில்;- நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை நழுவ விட்டது. குறிப்பாக தியாகராய நகர், தென்காசி, காட்பாடி போன்ற தொகுதிகளில் எல்லாம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை பறிகொடுத்தது.
அந்த 43 தொகுதிகளையும் சேர்த்து 1.98 லட்சம் வாக்குகள் மட்டும் கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றது. அதிமுகவினர் சோர்வடையாமல் உழைத்திருந்தால், 1.98 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். அப்படி பெற்றிருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி அமர்ந்திருப்பார். அமமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அமமுக என்ற கூடாரமே காலியாகிவிட்டது. பழனியப்பன் அதிமுகவில் தான் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் எதற்காக திமுகவில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை.
அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர வந்தால் அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து அதிமுக தொண்டர்கள் வரவேற்க வேண்டும். சில தினங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் ஆலோசனைகள் கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 2 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கியிருந்தால் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகியிருப்பார் என்று கூறியிருந்தார்.