Asianet News TamilAsianet News Tamil

உயிர் காக்க உதவுங்கள்.. நிலைமை மோசமாக இருக்கு.. உடனே மருந்தை அனுப்பி வையுங்கள்.. பிரதமருக்கு பழனிசாமி கடிதம்.!

தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளைக் கூடுதலாக அனுப்பும்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Allocation of medicine for black fungus.. Edappadi Palanisamy letter to pm modi
Author
Tamil Nadu, First Published Jun 1, 2021, 11:45 AM IST

தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளைக் கூடுதலாக அனுப்பும்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- தமிழகத்திற்குத் தேவைப்படும் தடுப்பூசிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை அதிகரித்து வழங்க உடனடியாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் (mucormycosis) வேகமாகப் பரவி வருவதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

Allocation of medicine for black fungus.. Edappadi Palanisamy letter to pm modi

இதற்கான ஆம்போடெரிசின்-பி மருந்து (Liposomal amphotericin B14) மருந்து தட்டுப்பாடும் தமிழகத்தில் அதிகம் உள்ளது. தயவுசெய்து கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து ஆம்போடெரிசின்-பி மருந்து சப்ளையை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios