Asianet News TamilAsianet News Tamil

செல்ஃபி எடுத்து அஜித்தை செம டென்சனாக்கிய ரசிகர்..! கடுங்கோபத்தில் ஃபோனை பிடுங்கி எச்சரித்த அஜித்

வாக்களிக்க வந்த நடிகர் அஜித்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செயலால் கோபமடைந்த அஜித், அந்த ரசிகரின் செல்ஃபோனை பிடுங்கி பின்னர் எச்சரித்து அனுப்பினார்.
 

ajith got angry and grab mobile of fan who tried to took selfie
Author
Chennai, First Published Apr 6, 2021, 9:49 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. சில தொகுதிகளில் மின்னணு வாக்கு இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு தாமதமானது. எனவே சில வாக்குச்சாவடிகளை தவிர மற்ற அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் காலை முதல் வாக்களித்துவருகின்றனர்.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் காலை 7 மணிக்கே வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்திவருகின்றனர். திருவான்மியூரில் உள்ள உள்ள சென்னை பெருநகர் தொடக்கப்பள்ளியில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவிருந்த நிலையில் வழக்கம்போலவே அரை மணி நேரம் முன்பாகவே 6.30 மணிக்கே முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்தார் அஜித். 

ajith got angry and grab mobile of fan who tried to took selfie

அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அஜித் - ஷாலினி ஆகியோருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முற்பட்டனர். அஜித்தை காண அந்த பகுதியில் கூட்டம் கூடியதால், 6.40 மணிக்கே அஜித் - ஷாலினியை காவல்துறையினர் வாக்குச்சாவடிக்குள் அழைத்து சென்றனர். அப்போது அவர்களுடன் சில ரசிகர்களும் உள்ளே நுழைந்து, அவருடன் செல்ஃபி எடுத்து தொல்லை கொடுத்தனர். அப்போது, அஜித்துக்கு முன்பாக நின்றுகொண்டு செல்ஃபி எடுத்து அவருக்கு தொல்லை கொடுக்க, அந்த ரசிகரின் செயலால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்த அஜித், கோபமாக அந்த ரசிகரின் செல்ஃபோனை பிடுங்கினார்.

இதையடுத்து அந்த ரசிகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஃபோனை பிடுங்கிய அஜித், பின்னர் எச்சரித்துவிட்டு ஃபோனை திருப்பி கொடுத்தார். சுற்றி நின்ற மற்ற ரசிகர்களையும் கண்டித்து அனுப்பினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios