Asianet News TamilAsianet News Tamil

ஜெ. ஆசிர்வாதம் இபிஎஸ்க்கு இருக்கு.. தேர்தலில் தோற்க மாட்டோம்.. போற போக்கில் சசிகலாவை சீண்டிய ஜெயக்குமார்..!

கழிவு நீர் கால்வாய் அருகே படுத்து போனில் பேசுவதுபோல ஹலோ, ஹலோ என பேசியது நாசர் தான். திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகள் சொல்லி மாளாது. அவ்வளவு செய்கிறார்கள். அதில், ஒன்று தான் நாசர் திமுக நிர்வாகி மீது கல் வீசும் செயல். திமுக கற்காலத்துக்கு சென்றுவிட்டது.

AIADMK will not lose in Erode by-election.. Jayakumar
Author
First Published Jan 25, 2023, 2:10 PM IST

திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பது போல் ஓபிஎஸ் சசிகலா தினகரன் ஆகிய மூவரும் இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- கழிவு நீர் கால்வாய் அருகே படுத்து போனில் பேசுவதுபோல ஹலோ, ஹலோ என பேசியது நாசர் தான். திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகள் சொல்லி மாளாது. அவ்வளவு செய்கிறார்கள். அதில், ஒன்று தான் நாசர் திமுக நிர்வாகி மீது கல் வீசும் செயல். திமுக கற்காலத்துக்கு சென்றுவிட்டது. பொம்மை முதலமைச்சர்தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். 

AIADMK will not lose in Erode by-election.. Jayakumar

தமிழகத்தில் போடாத சாலைகளுக்கு செலவிட்டதாக கணக்கு காட்டி பணத்தை கொள்ளையடிக்கின்றனர். தேர்தலின் அறிவித்த வாக்குறுதிகளை விடியா அரசு நிறைவேற்றவில்லை. விடியா திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல்துறையினரும், அதிகாரிகளும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். ஆட்சியாளர்கள் செய்யும் செயல்களுக்கு காவல்துறையினரும், அதிகாரிகளும் துணைபோகின்றனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை வைத்து திமுக வெற்றி பெற கனவு காண்பதாக தெரிவித்தார்.

AIADMK will not lose in Erode by-election.. Jayakumar

அவ்வப்போது சசிகலா மீண்டும் அதிமுக என் வசம் என கூறி எப்பொழுதுமே தலைமறைவு ஆகி கொள்வார்.  திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பது போல் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூவரும் இருந்து வருவதாக கூறினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் எங்கள் எடப்பாடி  பழனிசாமி அவர்களுக்கு இருந்து வருவதாகவும் அதனால் எந்த ஒரு வகையிலும் தேர்தலில் தோற்க மாட்டோம்.

AIADMK will not lose in Erode by-election.. Jayakumar

அதிமுகவின் வாக்கும், மக்கள் வாக்கு மூலம் அதிமுக மகத்தான வெற்றி பெறும்.  இரட்டை இலை என சின்னம் எங்களுக்கு பலமாக இருந்து வருவதாக தெரிவித்தார். திமுகவினர் சுண்டல் கடை பஜ்ஜி கடை பிரியாணி கடை என எந்த கடையும் விட்டு வைக்காமல் கல்லா கட்டி வருவதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios