Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவை சேர்க்காவிட்டால் அதிமுக 2-ஆக உடையும்... அடித்து கூறும் நாஞ்சில் சம்பத்..!

கே.பி.முனுசாமி கருத்தை வைத்து பார்க்கும் போது சசிகலாவை  அதிமுகவில் சசிகலாவை சேர்த்து கொள்வதாக தெரிகிறது என  நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். 

AIADMK will break into 2 if Sasikala is not included... Nanjil Sampath
Author
Tamil Nadu, First Published Feb 1, 2021, 4:19 PM IST

கே.பி.முனுசாமி கருத்தை வைத்து பார்க்கும் போது சசிகலாவை  அதிமுகவில் சசிகலாவை சேர்த்து கொள்வதாக தெரிகிறது என  நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். 

கொரோனா பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது, அவரது காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

AIADMK will break into 2 if Sasikala is not included... Nanjil Sampath

இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சசிகலா அதிமுக பொது செயலாளராக இருக்கும் போது தான் சிறைக்கு சென்றார். ஆகையால், அவர் அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு உரிமை உள்ளது என்றார். 

AIADMK will break into 2 if Sasikala is not included... Nanjil Sampath

திராவிட இயக்கத்தை பொறுத்தவரை பொதுசெயலாளர் தான் கட்சியை இயக்க முடியும். அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுசெயலாளர் ஆனார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கருத்தை வைத்து பார்க்கும் போது சசிகலாவை  அதிமுகவில் சசிகலாவை சேர்த்து கொள்வதாக தெரிகிறது. சசிகலாவை சேர்க்காவிட்டால் அதிமுக 2-ஆக உடையும் என நாஞ்சில் சம்பத் உறுதியாக கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios