அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டப்பேரவையின் பலம் 229 ஆக குறையும். அப்போது 115 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் அதிமுக ஆட்சியைத் தொடர்லாம். அப்படி நடக்க வேண்டுமென்றாலும், இடைத்தேர்தலில் அதிமுக 6 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுகவுக்கு, அதில் சிக்கல் ஏற்பட்டால், ஆட்சியைத் தக்க வைக்க மீண்டும் எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்தை கையில் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் திமுக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரங்களில் பேசிவருகிறார். அது உண்மையும் கூடத்தான். ஆனால், திமுக 22 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே இது சாத்தியம். அதேவேளையில் அதிமுக 9 தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டப்பேரவையின் பலம் 229 ஆக குறையும். அப்போது 115 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் அதிமுக ஆட்சியைத் தொடர்லாம். அப்படி நடக்க வேண்டுமென்றாலும், இடைத்தேர்தலில் அதிமுக 6 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மே 23-ம் தேதி பிறகு தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு காத்திருக்கிறது.
