தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக மற்றும் புதிய  தமிழகம் அடங்கிய மெகா கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதில் அதிமுகவுக்கு 25 இடங்களும், 7 தொகுதிகளில் பாஜக, நான்கில் பாமக , 3 –ல் தேமுதிக மற்றும் புதிய தமிழகத்துக்கு ஒரு இடம் என முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது யார் யாருக்கு ? எந்தெந்த இடங்கள் என்பது குறித்து தீவிர பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாடாளுமனறத் தேர்தலின்போது பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த கட்சியின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, இந்துத்துவா போன்ற நடவடிக்கைகளால் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வருமா ? என்ற தள்ளாட்டத்தில் உள்ளது. இதனால் தேர்தலுக்கு முன் பாஜக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க முடிவு செய்து அதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் பீஹாரைதொடர்ந்து, தமிழகத்தில், .தி.மு.., - பா.., தொகுதிபங்கீடுகுறித்தஉடன்பாடு, வரும் ஜனவரி மாதத்தில்ஏற்படஉள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் டெல்லி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அண்மைக்காலமாக நடைபெற்று வந்தது.

அதன்படி அதிமுகவுக்கு, 25 தொகுதிகள்போக, மீதமுள்ள, 15 தொகுதிகளில், ஏழில், பாஜக போட்டியிடுகிறது. எஞ்சியஎட்டுதொகுதிகளை, பா...,வுக்கு, நான்கு; தே.மு..,வுக்கு, மூன்று, புதியதமிழகம்கட்சிக்கு, ஒன்றுஎனபங்கிட, பாஜக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதன் முதல் கட்டமாக அதிமுக அமைச்சர்கள்தங்கமணி, வேலுமணிஆகியோர், டில்லிசென்று, பாதுகாப்புத் துறை அமைச்சர்நிர்மலாசீதாராமனைசந்தித்து, கூட்டணி குறித்து விவாதித்துள்ளனர்.

இது தொடர்பாக சர்வதேசஅளவில்பிரபலமான, அமெரிக்கநிறுவனம்ஒன்று, இந்தியாவில் நடத்தி கருத்துக்க் கணிப்பில் 252 முதல், 265 தொகுதிகள்வரை, பாஜகவெற்றிபெறும் என்றும், 150 முதல், 160 தொகுதிகள்வரை, காங்கிரசுக்குகிடைக்கும் என்றும், மற்றமாநிலகட்சிகளுக்கு, 120 தொகுதிகள்கிடைக்கும்' என, கூறப்பட்டுள்ளது.


இதனால் ஆட்சிஅமைக்க, .தி.மு.., - ஐக்கியஜனதாதளம், தெலுங்கானாராஷ்ட்ரீயசமிதிஆகியகட்சிகளின்ஆதரவைபெறபாஜக முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை அதிமுக, பாஜக, பாமக,தேமுதிக மற்றும்புதியதமிழகம்கட்சிகளுடன்சேர்ந்துபோட்டியிட்டால், 34 தொகுதிகளில்வெற்றிபெறமுடியும்என, அதேசர்வேதெரிவித்திருக்கிறது.

மேலும் அதிமுகவில் இருந்து தினகரன் விலகியுள்ளதால் பிரியும் வாக்குகளை பாமக சரிகட்டும் என கருதப்படுகிறது. புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், தர்மபுரி, மயிலாடுதுறை, சேலம், ஆரணி, வேலுார்ஆகியதொகுதிகள்வேண்டும்என, பாமக தரப்பில்கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், .தி.மு.., தரப்பில், தர்மபுரி, விழுப்புரம், புதுச்சேரி,மயிலாடுதுறை, திருநெல்வேலிஅல்லதுதுாத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம்ஆகியதொகுதிகளைதருவதாககூறப்பட்டுள்ளது.

இன்னும், பா..., தரப்பிலிருந்து, எந்தஒருமுடிவும்தெரிவிக்கப்படாமல்இருப்பதால், திரைமறைவுபேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தே.மு.தி.., தரப்பில், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சென்னையில்ஒன்று, மதுரை, நீலகிரிஆகிய, ஐந்துதொகுதிகள்கேட்கப்பட்டுள்ளன.ஆனால், கள்ளக்குறிச்சி, நீலகிரி, சென்னையில்ஒன்றுஎன, மூன்றுதொகுதிகள்தான்ஒதுக்கப்படும்என, .தி.மு.., தரப்பில்தெரிவிக்கப்பட்டதால், இன்னும்உடன்பாடுஏற்படவில்லை.


பாஜக தரப்பில் தென்சென்னை,சிவகங்கை,குமரி, நெல்லை, துாத்துக்குடி, கோவை, பெரம்பலுார், தென்காசிஆகியதொகுதிகள், கேட்கப்பட்டுள்ளன. இதில், தென்காசிதொகுதிமட்டும், புதியதமிழகம்கட்சிக்குஒதுக்கீடுசெய்யப்படுகிறது.

கிட்டத்தட்ட அதிமுக, பாஜக இடையே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை, 90 சதவீத அளவுக்கு முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்து வரும் ஜனவரி மாதம் உடன்பாடு குறித்து அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..