வரும் மே மாதம் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 25 தொகுதிகளிலும், பாஜக  15 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்து அதற்கான பரபர பேச்சவார்த்தையில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. வரும் பொங்கலுக்குள் அதிமுக – அமமுக இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் அடம் பிடித்தால் சசிகலா சம்மதத்துடன் அவரை கழற்றிவிட்டு இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தஆண்டுமேமாதம்மத்தியில், பா.., அரசின்பதவிக்காலம்முடிவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலைசந்திக்க, பாஜக , காங்கிரஸ் மற்றும்மாநிலகட்சிகள்தயாராகிவருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக., - காங்கிரஸ்கூட்டணிஉறுதியாகிஉள்ளது. அதிமுக தனித்துபோட்டியாஅல்லதுபாஜக , பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியா என கடும் குழப்பத்தில் உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல்தேதிஅறிவித்தபின், கூட்டணிகட்சிகளைசேர்ப்பதுபற்றி, முடிவுசெய்வோம்என, தெரிவித்திருந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினரின்வாக்குகள் கிடைக்காமல்போய்விடும்என்பதால், தேர்தலுக்குபின், பாஜகவைஆதரிக்கலாம்என முடிவு செய்து வைத்திருந்தாக கூறப்படுகிறது

ஆனால், பாஜகதரப்போ, .தி.மு..,வுடன்கூட்டணிஅமைத்துபோட்டியிடவேண்டும்என்பதில், உறுதியாகஉள்ளது. அதனால்தான், 'குட்கா' வழக்கில்நெருக்கடிஅதிகரித்துள்ளது
சி.பி.., நடத்திவரும், அந்தவழக்குவிசாரணை, அமைச்சரையும்தாண்டிசெல்லும்என்பதால், ஆளும்கட்சிஅதிர்ந்துபோய்உள்ளது. எனவே, பாஜகவை பகைத்து, தேர்தலைசந்திக்கமுடியாதஇக்கட்டில், அதிமுக உள்ளது.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி காய்நகர்த்தும், பாஜக கூட்டணிஉடன்பாட்டைஉறுதிசெய்யமுயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் முதல்கட்டமாக அதிமுகவுக்கு 25 தொகுதிகளும். பாஜகவுக்கு 15 தொகுதிகளும் என திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

தமிழகத்தில் பாஜகவுடன் இணக்கமாகஉள்ள, புதியதமிழகம்உள்ளிட்ட, சிலகட்சிகளுக்குஉள் ஒதுக்கீடாக, அவற்றில்சிலவற்றை, பாஜக வழங்கும் என்றும் .மீதமுள்ள, 25 தொகுதிகளில்,.தி.மு.., போட்டியிடவேண்டும்எனஅமித்ஷாஆணையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு முன்பு அதிமுக - அமமுக கட்சிகளை இணைத்து விட வேண்டும் என்று பாஜக பிளான் பண்ணி வருகிறது. இது தொடர்பாக பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் பேசி முடித்துவிட்டதாகவும், தினகரன் ஒத்துவராவிட்டால் அவரை கழற்றிவிட்டு இணைப்பு விழாவை நடத்தவும் பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு வேளை சசிகலா, தினகரன் என இருவரும் இதற்கு ஒத்துவரவில்லை என்றால் அமமுகவையே கழற்றிவிட்டு, விட்டு தேர்தலை சந்திககவும் பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது, தினகரனிடம்உள்ளஓட்டுக்கள், அவரதுசமுதாயத்தைசேர்ந்தஆதரவுஓட்டுக்களும், பிரதமர்மோடிஎதிர்ப்புஓட்டுக்களும்தான்.ஆனால், தகுதிநீக்கம்செய்யப்பட்டவர்களில், செந்தில்பாலாஜியைதவிர, மீதமுள்ள, 17 எம்.எல்..,க்களின்பின்னால்இருப்பது, .தி.மு..,ஓட்டுக்கள்தான். அவை .தி.மு.., வெற்றிக்குஉதவும். எனவே, அவர்களைமட்டும்சேர்த்தால்போதும்; கட்சிக்குலாபம்என, பாஜக மற்றொரு கணக்கு போடப்பட்டு வருகிறது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் தினகரனைவிட்டுவிட்டு, மற்றஎல்லாரையும்இணைப்பதற்கானவேலைகள்நடந்துவருகின்றன .ஜனவரிக்குள், இப்பணியைமுடித்து, பாஜககூட்டணிக்கு, பச்சைக்கொடிகாட்ட, .தி.மு.., தலைமைஆயத்தமாகிவருகிறதுதகவல்கள் வெளியாகியுள்ளன.