Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களுக்கு அதிரடி எச்சரிக்கை. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் கவனமா இருங்க.. பிச்சு உதறபோகுதாம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை: நேற்று (12.09.2021) மாலை நிலை கொண்டிருந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (13.09.2021) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒரிசா கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது, இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுவிழக்ககூடும்.

Action warning to the people of Tamil Nadu. The people of this district should be careful for the next 4 days... Weather alert.
Author
Chennai, First Published Sep 13, 2021, 1:15 PM IST

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 13.09.2021;  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், 14.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

Action warning to the people of Tamil Nadu. The people of this district should be careful for the next 4 days... Weather alert.

15.09.2021:, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 16.09.2021, 17.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Action warning to the people of Tamil Nadu. The people of this district should be careful for the next 4 days... Weather alert.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நேற்று (12.09.2021) மாலை நிலை கொண்டிருந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (13.09.2021) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒரிசா கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது, இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்ககூடும். வங்கக் கடல் பகுதிகள் 13.09.2021: மன்னார்  வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு  35  முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகக்ளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் 13.09.2021:  மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு  40  முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios