அரசு பள்ளிகளில் வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  

அரசு பள்ளிகளில் வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

கொரோனா தொற்றால் பல்வேறு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகின்றனர்.

12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களின் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 718 மாணவர்களுக்கு இன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார். இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார்.