கோடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

கோடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விளங்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணையத்தை அமைத்தனர். ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் நான்காம் தேதி நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையும் படிங்க: ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு…டெல்லி செல்கிறார் ஸ்டாலின்… ஈபிஎஸ் செல்வாரா?

அதை ஏற்றுக்கொண்டு அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இன்று அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆணையத்தின் அறிக்கையை இதுவரை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதையும் படிங்க: திமுக என்றாலே ஊழல் தான்... அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரம் கடும் விமர்சனம்!!

கோடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் நிகழ்ந்த டிசம்பர் நான்காம் தேதியை நினைவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.