Asianet News TamilAsianet News Tamil

ஆ.ராஜாவிடம் மனசாட்சி இருக்கு... மோடிக்கெதிராக கடுப்பான கனிமொழி..!

பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியதை கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை.

A.Raja has a conscience ... harsh language against Modi ..!
Author
Tamil Nadu, First Published Mar 31, 2021, 12:08 PM IST

பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியதை கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. திமுகவுக்கு மனசாட்சி உணர்வு இருந்ததால்தான் தனது பேச்சுக்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டார் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.A.Raja has a conscience ... harsh language against Modi ..!

இதுகுறித்து பேசிய அவர், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மோடி கண்டித்தாரா? பொள்ளாச்சி விவகாரத்தில் நியாயம் கிடைத்ததா என முதல்வரிடம் பிரதமர் கேட்டாரா? பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியதை கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. திமுகவுக்கு மனசாட்சி உணர்வு இருந்ததால்தான் தனது பேச்சுக்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டார்” எனக் குறிப்பிட்டார்.A.Raja has a conscience ... harsh language against Modi ..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்தும் அவரது பிறப்பு குறித்தும் திமுக எம்.பி ஆ.ராசா பரப்புரையில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆ.ராசா அவரின் பேச்சு குறித்து விளக்கமளித்ததோடு முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார். ராஜாவின் பேச்சுக்கு கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது கனிமொழி பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியதை கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை எனக்கூறி இருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios