Asianet News TamilAsianet News Tamil

திமுக ஜெயிச்சாக்கூட பரவாயில்லை, அமமுக மட்டும் ஜெயிக்ககூடாது… 500 கோடியில் புராஜக்ட் போட்டுள்ள இபிஎஸ்… 8 தொகுதிகள் மட்டுமே டார்கெட் !!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை 20 தொகுதி இடைத்தேர்தலில் 500 கோடி ரூபாய் வரை செலவு செய்ய தாயாராக இருப்பதாகவும் 8 தொகுதிகளில் வெற்றியை கண்டிப்பாக பெற வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக ஜெயித்தால் கூட பராவாயில்லை ஒரு தொகுதியில் கூட டிடிவியின் ஆட்கள் ஜெயித்து விடக்கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார்.

8 contituency traget in by election eps
Author
Chennai, First Published Nov 12, 2018, 7:41 PM IST

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் 8 தொகுதிகளை தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே எடப்பாடி அரசு தப்பிக்கு முடியும். இல்லை என்றால் கவிழும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே இந்த தேர்தல் குறித்து உளவுத்துறை அளித்த  ரிப்போர்ட்டில் திமுக 10 தொகுதிகளில் கட்டாயம் ஜெயிக்கும் என்றும் அமமுக 5 முதல் 6 தொகுதிகளிலும் அதிமுக 4 தொகுதிகளுக்குள் ஜெயிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

8 contituency traget in by election eps

இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி எப்படியாவது குறைந்தது 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முக்கியமான 8 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த தொகுதிகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம் என  அனுமதி வழங்கியுள்ளார்.

8 contituency traget in by election eps

மொத்தமாக 20 தொகுதிகளிலும் 500 சி வரை செலவு செய்ய அதிமுக தயாராக இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதையடுத்து எடப்பாடி சொன்னதுதான் அதிமுக நிர்வாகிகளை அசர வைத்துள்ளது. அதாவது 8 தொகுதிகள் நம் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள தேவை. எனவே அதை உறுதி செய்து கொள்ளுங்கள். மற்ற தொகுதிகளில் திமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் மட்டும் ஜெயித்துவிடக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

8 contituency traget in by election eps

ஏற்கனவே திமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை, அதிமுக ஜெயித்துவிடக்கூடாது என தினகரனில் ஆதரவாளர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் அதே எண்ணத்தில் அதிமுகவும் உள்ளது. இது திமுகவுக்கு  சாதகமாகுமா ? ஆட்சி நிலைக்குமா ? அதிமுகவை தினகரன் கைப்பற்றுவாரா ? இப்படி பல கேள்விகளுக்கு 20 சட்டமன்ற தொகுதி தேர்தல்தான் விடை சொல்லும்.

Follow Us:
Download App:
  • android
  • ios