Asianet News TamilAsianet News Tamil

35,836 காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.. சத்யபிரதா சாகு தகவல்.

10 பொது பார்வையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

35836 policemen are to be deployed at the counting center. Satyaprada Sagu Information.
Author
Chennai, First Published May 1, 2021, 3:50 PM IST

நாளை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமை செயலக்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.10 பொது பார்வையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

35836 policemen are to be deployed at the counting center. Satyaprada Sagu Information.

6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 5,64,253 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளது. 
இதே 2016ல் 3,30,380  தபால் வாக்குகள் வரப்பெற்றன. ஆகவே இந்த முறை தபால் வாக்கு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 
தமிழ்நாடு முழுவதும் 5622 - சி.ஏ. பி.எப் ( துணை இராணுவம்) தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் - 5154.

35836 policemen are to be deployed at the counting center. Satyaprada Sagu Information.

காவல்துறையினர் -25059 மொத்தம் - 35836 காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு மையங்கள் அதிகம் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் தொகுதியாகும் அங்கு 991 வாக்கு பதிவு மையங்கள் இருந்தன. குறைந்த பட்சமாக கீழ் வேலூர் - 251 ஆகும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் வாக்கு எண்ணிக்கை மையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். 
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios