2000 buses coming soon in tamilnadu by transport minister informed
தமிழகத்தில் விரைவில் 2000 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்து ஒன்று மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி இன்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பெருமாள்கோவில்பட்டி அருகே சாலையில் பழுதாகி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
வேகமாக வந்த அரசு பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:
தமிழகத்தில் விரைவில் 2000 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலைகளில் பழுதாகும் பேருந்துகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.
அரசு பேருந்துகள் அனைத்தும் நல்ல நிலையில் தான் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
