Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள் மீது இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள். - காவல்துறை.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்கள் மீது இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2 lakh 20 thousand 806 cases so far against those who traveled without wearing a helmet in Tamil Nadu. Police.
Author
Chennai, First Published Apr 14, 2021, 1:13 PM IST

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்கள் மீது இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று 2 ஆம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 45 ஆயிரத்து 049 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

2 lakh 20 thousand 806 cases so far against those who traveled without wearing a helmet in Tamil Nadu. Police.

கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 7 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2 lakh 20 thousand 806 cases so far against those who traveled without wearing a helmet in Tamil Nadu. Police.

குறிப்பாக கொரோனாவின் 2 ஆம் அலை வேகமாக பரவி தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் தலைநகர் சென்னையில் காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 1, 284 வழக்குகள் பதியப்பட்டு 2 லட்சத்து 56 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது சென்னை காவல்துறை சார்பில் 4 ஆயிரத்து 874 வழக்குகள் பதியப்பட்டு 9 லட்சத்து 74 ஆயிரத்து 800 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை காவல்துறையின் சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios