சபரிமலையில், இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் தரிசனம் முடித்து விட்டனர் என கேரள அமைச்சர் மணி தெரிவித்துள்ளார். பொதுவாக பிந்து, கனக துர்கா மற்றும் மஞ்சு ஆகிய மூன்று பெண்கள் தான் சபரிமலைக்குக் சென்று வழிபாட்டார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது 100 க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி தரிசனர் செய்துள்ளதாக அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து கேரள அரசு எல்லாப் பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது என முடிவு செய்து அதற்காக அழைப்பு விடுத்தது. இதையடுத்து ஏராளமான பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அய்யப்ப பக்தர்கள் பெண்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் பிந்து, கனக துர்கா மற்றும் மஞ்சு உள்ளிட்ட சில பெண்கள் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இது அய்யப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரள மாநில மின்சாரத் துறை அமைச்சர் மணி,
கொட்டாரக்கரையில்நேற்றுநடந்தநிகழ்ச்சியில்பேசினார். அப்போது சபரிமலைஅய்யப்பன்கோவிலில், நுாற்றுக்கணக்கானபெண்கள்தரிசனம்செய்துவிட்டனர். இன்னும்தரிசனம்நடத்துவார்கள். அவர்களுக்கு, போதியபோலீஸ்பாதுகாப்புவழங்கப்படும் என்றார்.

பெண்களின்வயதைஅளவீடுசெய்யும்கருவிஒன்றும்சபரிமலையில்இல்லை;வேண்டுமானால், 50 ஆயிரம்பெண்களை, இருமுடிகட்டிசபரிமலைக்குஅழைத்துச்செல்ல, மார்க்சிஸ்ட்கட்சியால்முடியும்தடுக்கயாரும்வரமாட்டார்கள்; ஆனால், அதுகட்சியின்வேலைஅல்ல. கோவிலுக்குபோகவேண்டும்எனநினைப்பவர்கள்போகட்டும்; அதுதான்எங்கள்நிலை என்றார்..

சபரிமலைக்கு பெண்கள்சென்றால், அய்யப்பனின்பிரம்மச்சரியம்கலையும்எனகூறுவதுஏமாற்றுவேலை. தந்திரிக்குமனைவி, குழந்தைஉண்டு. அதனால், அய்யப்பனுக்குஏதாவதுநடந்ததா என அவர் கேள்வி எழுப்பினார்.

பந்தளம்அரண்மனைக்குசொந்தமானதுஅல்லசபரிமலை. ஐந்துநீதிபதிகள்அளித்ததீர்ப்பைசெயல்படுத்தும்கடமை, மாநிலஅரசுக்குஉண்டு. அந்ததீர்ப்பைநடைமுறைப்படுத்தும்பொறுப்பு, தந்திரிக்குஉண்டு என்று மணி தெரிவித்தார். அமைச்சர் மணியின் பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.