we need to change the thaali kayiru on this specific day

 கணவன்மார்களே..! மனைவியின் தாலிக்கயிற்றில் இது உள்ளதா..?

 பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் மிக முக்கியமான ஒன்று தாலிக்கயிறு.

தாலிக்கயிற்றில் அழுக்கு இருந்தாலோ அல்லது காய்ந்த தோற்றத்தில் இருந்தாலோ, மாங்கல்யம் பழுது பட்டாலோ அதனை மாற்றும் போது நாம் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கிறது.

அதில் குறிப்பாக,மாங்கல்யம் மாற்றுவதாக இருந்தாலோ சரி அல்லது தாலிக்கயிரை மாற்றுவதாக இருந்தாலும் சரி...திங்கள் செவ்வாய் வியாழக்கிழமை இந்த மூன்று நாட்கள் தான் சரியான நாட்களாகும்

கோவில்களில்

கோவிலுக்கு சென்று அங்கு மாற்றும் போது,கோவிலினுள் கிழக்கு பக்கமாக அமர்ந்தபடி மாற்றுவது நல்லது .

மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் தாலி கயிறில் ஊக்கு,சாவி போன்றவற்றை தொங்கவிடக் கூடாது.

ராகு எமகண்ட நேரத்தில் மாற்ற கூடாது

இவ்வாறு செய்தால்,தம்பதிகள் தீர்க்க சுமங்கலியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது ஐதீகம்

அதே போன்று அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை ஏற்படும்.எனவே சரியான தருணத்தில் தாலி கயிறை மாற்றிக் கொள்வது நல்லது.