Asianet News TamilAsianet News Tamil

குட்டீஸ்க்கு பிடிச்ச உருளைக்கிழங்கில் இப்படி பூரி செஞ்சு கொடுங்க.. அடிக்கடி கேட்பாங்க..!

Urulaikilangu Poori Recipe : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கில் பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

urulaikilangu poori recipe or aloo puri in tamil mks
Author
First Published Sep 14, 2024, 6:00 AM IST | Last Updated Sep 14, 2024, 6:00 AM IST

இன்று காலை உங்கள் வீட்டில் பூரி செய்ய போகிறீர்கள் என்றால், எப்போதும் போல செய்யாமல் சற்று வித்தியாசமாக அதுவும் குறிப்பாக, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்து கொடுங்கள். அப்படி என்ன செய்வது என்று தெரியவில்லையா உங்களுக்கான பதிவு தான் இது.

பொதுவாகவே குழந்தைகள் உருளைக்கிழங்கு என்றாலே ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இதுவரை நீங்கள் உருளைக்கிழங்கில் கூட்டுப், பொரியல் என்றுதான் சமைத்துக் கொடுத்திருக்கிறீர்களா? அப்படியானால் ஒரு முறை அதை வைத்து பூரி செய்து கொடுங்கள். உங்கள் குழந்தைகள் மட்டுமின்றி, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கு பூரி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். மேலும், இந்த பூரி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, சுலபமான முறையில் செய்து விடலாம். முக்கியமாக இந்த உருளைக்கிழங்கு பூரிக்கு எந்த சைட் டிஷ்ஷும் தேவைப்படாது. சரி வாங்க.. இப்போ இந்த பதிவு உருளைக்கிழங்கு வைத்து பூரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  சுவையான.. சத்தான.. பாலக்கீரையில் பூரி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!!

உருளைக்கிழங்கு பூரி செய்ய தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (மசித்தது)
ரவை - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1/2 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
ஓமம் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  இன்னைக்கு டிபனுக்கு பூரி செய்ய போறீங்களா? ஒருமுறை 'இந்த' மாதிரி செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

செய்முறை : 

உருளைக்கிழங்கு பூரி செய்ய முதலில், ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைத்த கோதுமை மாவை சேர்க்கவும். பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், ஓமம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், ரவை
ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

இப்போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளுங்கள். மாவை பிசைந்த பிறகு, எண்ணெய் தடவி, ஒரு தட்டை வைத்து பாத்திரத்தை மூடி வைத்து, சுமார் 15 நிமிடம் அப்படியே வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து மாவை சின்ன உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கல்லில் தடவி உருட்டி வைத்து கொள்ளுங்கள். இப்படியே, உருட்டி வைத்த எல்லா மாவையும் தடவி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு வாணலியை அடுப்பில் அதில் பூரி பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும், அதில்  உருட்டி வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரிது எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு பூரி ரெடி. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios