வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எப்படிப்பட்ட வழிமுறைகளை  கடைபிடிக்க வேண்டும் என  தமிழக அரசு ஒரு  லிஸ்ட் போட்டு பாயிண்ட்ஸ் தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..! தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டியது என்ன ?

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

உலகம் முழுக்க 16,02,619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.95,657 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதாவது கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் மொத்தம் 3,55,671 பேர் இதுவரை உலகம் முழுக்க குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க நேற்று ஒரே நாளில் 84860 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



இந்தியாவில் கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 199 பேர் உயிரிழந்துள்ளனர் 504 பேர் குணமடைந்துள்ளனர்

தற்போது வரையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா - 1,364, தமிழகம் - 834, டெல்லி - 720, ராஜஸ்தான் - 463 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஒரு நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எப்படிப்பட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு ஒரு லிஸ்ட் போட்டு பாயிண்ட்ஸ் தெரிவித்து உள்ளது.