பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் நேரம் அறிவிப்பு...
கிரிவலத்திற்கு பெயர் போனது திருவண்ணாமலை . திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மற்றும் மற்ற மாநில பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது வழக்கம் .
அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் மேற்கொள்வது பல ஆண்டு காலமாக வழக்கத்திலிருந்து வருகிறது . இந்நலையில் இன்று பவுர்ணமி என்பதால் , கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது . அதன்படி , இன்று இரவு 8.58 மணிக்கு துவங்கி நாளை இரவு 8.52 மணி வரை உகந்ததாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று கிரிவலம் என்பதால் , லட்ச கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்பட்டு , தேவையான அனைத்து வசதியையும் தயார் நிலையில் வைத்துள்ளது கோவில் நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது .