மகளிர்தினம் எதற்கு ? பெண்கள் பாதுகாப்பிற்கு உறுதி உண்டா இந்த சமுதாயத்தில் ...?
மகளிர்தினம் எதற்கு ?
தன்னை சுற்றி ஒரு மாயையை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வரும் பெண்களுக்கு தான் இன்றைய தினம் “ மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது என்றால் பாருங்களேன்
மகளிர் தினம் கொண்டாடும் அளவுக்கு, இந்தியாவில் மகளிருக்கான சுதந்திரம் , அவர்களுக்கான உரிமை எல்லாம் நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை .
பெயரளவிற்கு பெண்களை போற்றிக் கொண்டு , சமூதாயத்தில் ஒரு படி கீழே தான் வைத்திருக்கிறார்கள் பெண்களை... அதற்கேற்றவாறு பெண்களும் , தன்னை சுற்றி ஒரு மாயை உருவாக்கி, அதற்குள் வாழ்கிறார்கள் .
பெண்களுக்கு பாலியல் வன் கொடுமை நடப்பதிலிருந்து , பெண் சிசு வரை பாலியல் பாலாத்கார கொடுமை செய்து கொல்வதும் , எரிப்பதுமாக இருக்கும் போது மகளிர் தினம் என்ன செய்ய போகிறது? எதற்காக மகளிர் தினம் ?
இன்றைய தினத்தன்று உண்மையில் மகளிரை மதித்து தான் இந்த சமூதாயம் இருக்கிறது என்றால், பெண்களுக்கு நடைபெறும் அனைத்து கொடுமைக்கு எதிராக ஒரு கடுமையான சட்டம் கொண்டுவர அரசு முற்பட்டால் அதுவே மிக சிறந்ததாக இருக்கும் .
இதற்காக எல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாய் நிறைய மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூறியே மாயை உருவாக்கிட வேண்டாமே ......