விளம்பரங்களுக்கு அதிரடி தடை :  உச்சநீதிமன்றம்  உத்தரவு

இணையதளத்தில்  ஒரு சில  விளம்பரங்கள், கருவில்  இருக்கும் குழந்தையின்  பாலினம்  பற்றி  தெரிந்துகொள்ள தூண்டுவதாக  உள்ளது.

இது போன்று,  குழந்தை பிறப்பிற்கு  முன்பே,  பாலினம்  அறிந்து கொள்வதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குழந்தை பிறக்கும் முன்பே பாலினத்தை அறிந்துகொள்வதற்கான சோதனைகள் குறித்த விளம்பரங்கள் மற்றும் தகவல்களை இணையதளங்களில் வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குழந்தை பிறக்கும் முன்பே பாலினத்தை அறிந்துகொள்வதற்கான சோதனைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  பாலினம் அறியும் சோதனை குறித்து விளம்பரங்கள் உள்ளிட்ட எந்த தகவலும் இணையதளங்களில் வெளியிடப்படக் கூடாது என தீர்ப்பு வழங்கியது........