வீடு தேடி வரும் 2,000 ரூபாய் ...!!! ஏடிஎம் முன் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.....!!!
வீடு தேடி வரும் 2,000 ரூபாய் ...!!! ஏடிஎம் முன் நீண்ட வரிசையில் நிக்க வேண்டாம்.....!!!
ரூபாய் ஒட்டு செல்லாது என்ற அறிவிப்பால், தற்போது நாட்டில் நிலவும் பண தட்டுப்பாடு காரணமாக , மக்கள் நீண்ட வரிசையில் நின்று புதிய இரண்டாயிரம் ரூபாயை எடுப்பது கண் கூடாக பார்க்க முடிகிறது.
இந்நிலையில், தற்போது, மக்கள் சந்தித்து வரும் இந்த பிரச்னையை போக்குவதற்கு ,பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான , ஸ்நாப் டீல் புதிய உத்தியை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நாம் ஸ்நாப் டீல் இணைய பக்கத்தில் சென்று , 2000 ரூபாய் வேண்டும் என , அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனை பயன்படுத்தி, புக் செய்தாலே போதும், புக் செய்த அடுத்த நாளே, நம் இல்லம் தேடி வந்து , புதிய 2000 ரூபாய் நோட்டை நமக்கு கொடுப்பார்கள்.
அவ்வாறு 2,000 ரூபாய் பெறும் போது, நாம் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்து கொள்ளலாம்.
இதற்காக , ஸ்நாப் டீல் , வெறும் ஒரு ரூபாயை மட்டும் , டெலிவரி சார்ஜாக பெற்று கொள்கின்றனர்.....
பணம் எடுக்க அவதிப் படும் இந்நேரத்தில், ஸ்நாப் டீலின் இந்த சேவை உண்மையில் வரவேற்கத்தக்கது.