காதலியின் தோற்றத்தில் இருப்பதாகக் கூறி, வெள்ளை நிற நாகப் பாம்புடன் காதலன் வசித்து வரும் சம்பவம் சிங்கப்பூரில் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் வோரணன் சரசலின். இவரது காதலி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதை டுத்து இயர் ஒரு வெள்ளை நிற நாகப்பாம்பை பார்க்க நேர்ந்தது. அந்தப் பாம்பு தனது மறைந்த காதலியின் தோற்றத்தில் இருப்பதைப் போல உணர்ந்தவர் அதனுடன் அதிக நேரம் செலவு செய்கிறார் என்பதை விட, அதனுடன் வாழ்கிறார் என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு எங்கு சென்றாலும் அதையும் தன்னுடன் அழைத்து செல்கிறார். அதனுடன் விளையாடுகிறார். டிவி பார்க்கும்போது அருகில் அமர வைத்துக் கொள்கிறார். அதனுடன் தினமும் பேசுகிறார்.
புத்த மதத்தில், இறந்தவர்கள் விலங்குகளாக மறுபிறவி எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால், இறந்த தனது காதலி பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளார் என்று நம்பி வருகிறார்.
இந்த பாம்பை, அவர் ஒரு ஓட்டலில் சாபிட்டு கொண்டிருக்கும் பொழுது, மேலிருந்து கீழே விழுந்ததாகவும், அன்று முதல் அந்த பாம்பையே , இறந்த தன் காதலியாக நினைத்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த நம்பிக்கையை பார்த்து, சிங்கபூர் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
