Asianet News TamilAsianet News Tamil

ஃபேஸ்புக் மூலம் 4 அடி உயரமுள்ள காதலனை கரம் பிடித்த சிவகங்கை காதலி..!!

மனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை கொண்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்து பெற்றோர், உற்றார், உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

Sivagangai girlfriend of 4ft tall boyfriend on facebook .. !!
Author
Karur, First Published Feb 7, 2020, 11:37 PM IST


ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வரப்போகும் புருசன் அஜித்,கமல்,அரவிந்தசாமி போன்று இருக்க வேண்டுமென்று கனவு காண்பார்கள். ஆனால் அதெல்லாம்  நடக்காவிட்டாலும் அழகான பொருத்தமான கணவன் தனக்கு அமைய வேண்டும் என்று போகாத கோயிலுக்கு கூட கால்கடுக்க நடந்தும்,நேர்த்திக்கடன் வைத்தும்,அம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றும் பெண்கள் ஏராளமாக தனது எதிர்கால கணவனை அடைய படாதபாடு படுகிறார்கள்.ஃபேஸ்புக் காதல் திருமணம் புதிதல்ல என்றாலும் குள்ளமனிதர் ஒருத்தரை ஃபேஸ்புக் மூலம் காதலித்து பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் கரம்பிடித்திருக்கிறாள் சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

Sivagangai girlfriend of 4ft tall boyfriend on facebook .. !!
 
 கரூர் மாவட்டம் பஞ்சமாதேவியை அடுத்த சோமூரைச் சார்ந்த இளைஞர் விக்னேஷ்வரன். இவர் சுமார் 4 அடி உயரம் மட்டுமே கொண்டவர். பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் இவர்.

இந்தநிலையில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கிய விக்னேஷ்வரனுக்கு சிவகங்கையை சேர்ந்த பவித்ரா வயது 24 என்கிற இளம்பெண் நண்பராக அறிமுகமானார். டி.பார்ம் படித்துக் கொண்டிருந்த அவரும், விக்னேஷ்வரனும் முகநூலில் நட்பை வளர்த்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவர்களது பழக்கம் காதலாக மாறியது.ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அறிந்த பெண் வீட்டார் உனக்கும், விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லை. எனவே உங்கள் காதலை ஏற்க முடியாது, அவனை மறந்து விடு என்று உறவுகள் சொன்னாலும் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்தார் பவித்ரா. மனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை கொண்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்து பெற்றோர், உற்றார், உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

Sivagangai girlfriend of 4ft tall boyfriend on facebook .. !!

 கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரையும் வரவழைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே! எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விட்டு சென்றனர்.

Sivagangai girlfriend of 4ft tall boyfriend on facebook .. !!

விக்னேஷ்வரனை காதலித்து கரம் பிடித்த பவித்ரா, திருமணம் முடிந்த கையோடு செல்பி எடுத்துக்கொண்ட காட்சி  அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது. விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மணமகளை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் இருவரும் புதுவாழ்வை தொடங்க உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றனர். சினிமா நடிகர்கள் போன்று தனக்கு மணமகன் வேண்டும் என கனவு கண்டு கொண்டிருக்கும் பெண்களுக்கு மத்தியில் சுமார் 4 அடி உயரம் மட்டுமே உள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்து கொண்டது அப்பகுதி மக்களை ஆச்சரியம் அடையச் செய்திருக்கிறது.

TBalamurugan

Follow Us:
Download App:
  • android
  • ios