சில்லறை இல்லையா...?ஆன்லைன்ல எனக்கு ரீசார்ஜ் பண்ணுங்க.......”நான் ஹெல்ப் பண்றேன் “......!!!

மோடியின் அதிரடி திட்டத்தால், ஆடிபோய் இருக்கும் நம் மக்கள், இந்த நல்ல திட்டத்தை பெரிதும் வரவேற்கிறார்கள்.

அதே சமயத்தில், சில்லரைகாகவும், 50 மற்றும் 100 ரூபாய் கிடைக்காததாலும், அவதிப்படும் மக்கள், எதையாவது வாங்க வேண்டும் என்றால், உதாரணத்துக்கு , சாப்பிட , பால் வாங்க., அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், “ யாரிடம் நூறு ரூபாய் நோட்டுகள் இருக்கிறதோ, அவர்கள் முகம் தெரியாத மற்றவர்களுக்கும் கொடுத்து, அதற்குண்டான பணத்திற்கு, ஆன்லைன் மூலம், தங்கள் மொபைல் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்து கொள்கிறார்கள்.....”

இதை பொதுமக்கள் பேசிக்கொள்வதை கண்ணெதிரே பார்க்க முடிகிறது......

சேவையை இப்படியும் பரிமாறிக்கொள்ளலாமே..............!!!