Horoscope: ஏப்ரல் 29 ஆம் தேதி தனது சொந்த ராசியில் நுழையும் சனி பகவான்...யாருக்கு பாதிப்பு..? யாருக்கு நன்மை..?
Horoscope: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 அம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார்.
சனி பெயர்ச்சி 2022:
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 அம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். ஆகவே இப்பெயர்ச்சியால் மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சனி மாற்றம் நல்ல செய்தியை கொடுக்க உள்ளது. சிலர், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனம் ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். சனியின் பெயர்ச்சி பதவி, கௌரவம், புதிய வருமான ஆதாரங்களால் பலன்கள் உருவாகும். அதே நேரத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் பலன்கள் கிடைக்கும்.
துலாம்:
உங்களுக்கு சனி பெயர்ச்சி வாகனங்கள், சொத்து வாங்குவதால் மகிழ்ச்சி, கிடைக்கும். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். சாதகமான இடமாற்ற யோகம், போராட்டத்திற்கு பின் வெற்றி கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம், கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும்.
தனுசு:
சனி பெயர்ச்சி உங்களுக்கு வேலைக்கான யோகம், நிதி நெருக்கடிகள் நீங்கும். நிலம், வாகன சுகம், குழந்தை பெறும் யோகம். இருப்பினும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே எதிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
மேஷம்:
சனி பெயர்ச்சி காலத்தில், கடந்த நாட்களின் தோல்வியால் விரக்தியில் உட்கார வேண்டாம். புதிய ஆற்றலுடன் உங்கள் வேலையைத் தொடங்குங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவதே சிறந்தது. எதிலும் துணிச்சலுடன் செயல்படுங்கள்.போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சி இந்த இரண்டரை மாத காலத்தில் கடினமாக உழைக்க வேண்டும். சனியின் தாக்கத்தினால் தற்போதுள்ள போராட்டங்கள் வேகமடையும், எனவே எச்சரிக்கை அவசியம். எனினும் நிதானத்துடன், அதே நேரத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் பலன்கள் அதிகம்.