Asianet News TamilAsianet News Tamil

பிறந்த குழந்தைக்கு" கொரொனா" என பெயர் வைத்த பெற்றோர்.!!

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Parents who name their newborn baby "Corona" !!
Author
India, First Published Mar 23, 2020, 11:06 PM IST

T.balamurukan

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். 

Parents who name their newborn baby "Corona" !!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.  நாட்டில் 30 மாநிலங்களையும் முழுமையாக முடக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கிடையே, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்,உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது.அதற்கு பெற்றோரின் சம்மதத்துடன், குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் 'கொரோனா' என்று பெயர் சூட்டியுள்ளார்.

Parents who name their newborn baby "Corona" !!

உலகம் முழுவதும் வைரலான இந்த வைரஸின் பெயரைக் கொண்ட குழந்தை, உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டது. கொலைகார வைரஸின் பெயரையா குழந்தைக்கு சூட்டுவார்கள் என்று பலரும் திரிபாதியிடம் உறவினர்கள் பலரும் கேள்வி கேட்க  அதற்கு அவரோ, 'கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வருகிறது.மக்களிடம் பல நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக உள்ளது. கொரோனாவால் உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்தக் குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்து போராடுபவளாக இருப்பார்' என்று பதில் அளித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios