உங்கள் குழந்தையும் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் முதல்ல 'இத' சொல்லி கொடுங்க!
பெற்றோர்களை சிறுவயதில் இருந்தே சில பழக்கங்களை உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையில் தோல்வி அடையமாட்டார்கள். அவை..
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும், அது அவர்களின் கையில் தான் இருக்கிறது என்று கூட டயலாக் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில், வெற்றி என்பது குழந்தையின் கையில் மட்டுமல்ல, பெற்றோரின் கையிலும் இருக்கிறது. அந்தவகையில், சிறுவயதில் இருந்தே சில பழக்கங்களை உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையில் தோல்வி அடையமாட்டார்கள். வெற்றி மேல் வெற்றி அடைவார்கள். அது என்னென்ன என்பதை குறித்து கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சமையல் அடிப்படைகள்: குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் குறைந்தபட்ச அடிப்படைகளை கற்றுக்கொடுங்கள். உணவு மற்றும் அதை பாதுகாப்பை எவ்வாறு தயாரிப்பது என்பதை அவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில் நல்ல முறையில் உணவு சமைப்பதை கற்றுக்கொள்ளலாம். இது எதிர்காலத்தில் அவர்களுக்கு பெரிதும் உதவும். வெளிநாடுக்கு சென்றால் கூட அவர்கள் சிரம்ப்படமார்கள்.
நேர மேலாண்மை: நேரம் பொன்னானது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். மேலும், அது யாருக்காகவும் நிற்காது. கடந்த காலம் திரும்பி வராது. இதனை நாம் மட்டும் அறிந்தால் போதாது.. நம் குழந்தைகளும் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, அதன் மதிப்பை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். சில, பெற்றோர், நேரம் வரும்போது நேரத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியும் என்று அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால், அது தவறு. அவர்கள் கண்டுபிடிக்கும் நேரத்தில், அவர்கள் மதிப்புமிக்க ஒன்றை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். எனவே பெற்றோர்களே, அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே நேர மேலாண்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொடுக்க மறக்காதீர்கள்.
சுத்தம்: வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால். வீடு எந்த நிலையில் இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. வீடு முழுவதும் ஆங்காங்கே பொம்மைகள் சிதறி இருக்கும். குழந்தைகள் விளையாடிய பிறகு, சிதறி கிடக்கும் அனைத்தையும் ஒழுங்கமைக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இதன் மூலம் அவர்கள் சுத்தம் அமைப்பின் விழிப்புணர்வு, தூய்மையின் மதிப்பை அறிந்து கொள்வார்கள்.
நிதி மேலாண்மை: பணத்தின் மதிப்பை குழந்தைப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது நல்லது. அதுமட்டுமின்றி, எப்பொழுது, எங்கே, எப்படி, ஏன் பணத்தைச் செலவிட வேண்டும்? எதற்காகச் சேமிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க மறக்காதீர்கள்.
வீட்டைப் பராமரித்தல்: வீட்டைச் சுத்தம் செய்வது முதல் சமைப்பது வரை எல்லாப் பொறுப்பையும் பெற்றோர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். குழந்தைகளை வேலைகளைச் செய்யச் சொல்லி என்ன பிரயோஜனம் என்று சில பெற்றோர்கள் யோசிக்கலாம். ஆனால், அது தவறு. குழாய் பழுது பார்ப்பது, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது போன்ற குறிப்பிட வேலையை செய்ய பழக்குங்கள். இதனால் அவர்கள் வீட்டில் என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: பெற்றோர்களே.. இந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் உடனே நிறுத்துங்கள்..!!
தோட்டம்: வீட்டில் செடிகளை வளர்க்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. குழந்தைகள் வந்து உதவி செய்ய நினைத்தாலும், சில பெற்றோர் அதை தொடாதே, இதை தொடாதே என்று சொல்லி அவர்களை ஒதுக்கி அனுப்புவார்கள். ஆனால் அது தவறு. அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே அவற்றை பராமரிக்க கற்றுக்கொடுங்கள். இதனால் சுற்றுசூழல் மீதான பொறுப்பு தெரியவரும்.
முதலுதவி: முதலுதவி, ஒருவருக்கு எப்போது தேவைப்படும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, கண்டிப்பாக வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும், அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகக் கற்றுக் கொடுங்கள்.
கை தையல்: பெரும்பாலான தாய்மார்கள் பிஸியாக இருப்பதால் தங்கள் குழந்தைகளுக்கு கை தையல் சொல்லி கொடுப்பதில்லை. ஆனால் அது தவறு. மேலும் இதை அவர்களுக்கு கண்டிப்பாக சொல்லிக்கொடுங்கள். இது எதிர்காலத்தில் அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: உங்கள் குழந்தை நீங்கள் சொல்வதை கேட்கவில்லையா? பெற்றொருக்கான சில எளிய தீர்வுகள் இதோ..
கலை மற்றும் கைவினை: கலை மற்றும் கைவினை கூட குழந்தையின் ஆர்வத்திற்கு ஏற்ப கற்பிக்கப்பட வேண்டும். இதற்கென, சிறப்பு வகுப்புகளில் சேர்த்தாலும் பரவாயில்லை. இதனால் அவர்கள் படைப்பாற்றலை அதிகப்படுத்துபவராக கூட மாறலாம். குறிப்பாக குழந்தை வளரும் போது.. பெரிய கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டும் என்றால்.. இவைதான் முதல் படியாக இருக்கும். எனவே.. இவற்றை கற்றுக்கொடுக்க மறக்காதீர்கள்.
தொடர்பு: பல குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் சண்டை போட்ட பின் பேச மாட்டார்கள். ஆனால் அப்படி இருக்கக் கூடாது என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். தகவல்தொடர்பு முக்கியத்துவம் மற்றும் முரண்பாடுகளை எவ்வாறு தீர்ப்பது என்பதையும் கற்பிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டால் குழந்தைகள் எந்தச் சூழலையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D