no change in 12th syllabus



12  ஆம்  வகுப்பு  பாட திட்டத்தில்  எந்த  மாற்றமும் இல்லை  என பள்ளிகல்வித்துறை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.  

பொதுவாகவே 5 வருடங்களுக்கு ஒரு முறை  பாடத்திட்டத்தில் மாற்றம்  கொண்டு வர  வேண்டும் . ஆனால்  கடைசியாக  கடந்த  2௦௦5 ஆம்  ஆண்டு தான்  பாடத்திட்டத்தில்  மாற்றம்  கொண்டுவரப்பட்டது.

தமிழ் நாடு  பாடநூல்  மற்றும்  கல்வியியல்  பணிகள்  கழகமானது  பத்தாம்  வகுப்பு மற்றும்  12  ஆம்  வகுப்புக் குண்டான  பாட  புத்தகத்தை  அச்சிட்டு  விட்டது .

 இந்நிலையில்  இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள தருவாயில் ,  பாட புத்தகத்தில்  எந்த  மாற்றமும் இந்த ஆண்டு  இருக்காது என  தெரிவித்துள்ளனர் .

அதே  வேளையில்,  இனி வரும் காலங்களில்  போட்டி  தேர்வுகளை  எதிர்கொள்வதற்கு, பாடத்திட்டத்தில்  மாற்றம்  கொண்டு வந்தால் தான்  மாணவர்களுக்கு மேலும்  பயனுள்ளதாக இருக்கும் என  ஆசிரியர்கள்  தெரிவித்துள்ளனர் .