ஓமிக்ரான் முடிவுக்கு வரவில்லை...மீண்டாலும் விடாது துரத்தும் பிரச்சனை...WHO விடுத்துள்ள எச்சரிக்கை..!!
ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து மீண்டவர்களிடமும் நீண்ட கால முதுகுவலி, மூச்சுத் திணறல், இதய நோய்கள் போன்றவை காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டில் பொதுமக்கள் அலட்சியம் காட்ட, வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து மீண்டவர்களிடமும் நீண்ட கால முதுகுவலி, மூச்சுத் திணறல், இதய நோய்கள் போன்றவை காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டில் பொதுமக்கள் அலட்சியம் காட்ட, வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா பரவல் முடிவுக்கு வரவில்லை. தற்போது பின்பற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் இனி வரும் காலத்திலும் தொடர வேண்டும். உருமாறிய வகை வைரஸ் எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் பரவலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில், தற்போது ஓமிக்ரான், டெல்ட்டா வைகை கொரோனா மாறி மாறி தாக்கி வரும் நிலையில், அதன் அறிகுறைகளை வைத்து வேறுபாடு கண்டறியப்படுகிறது. டெல்ட்டா வகை கொரோனாவை விட, ஓமிக்ரான்மா றுபாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைவு எனினும், பொதுமக்கள் அலட்சியம் காட்ட, வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்தியாவிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 55,000 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கொரோனா விழிப்புணர்வு பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில், உலகெங்கிலும் உள்ள சுகாதார வல்லுநர்கள், ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் பொதுவான காய்ச்சலின் அறிகுறிகளைப் போல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு, இரவில் வியர்வை, தொண்டை வலி மற்றும் முதுகு மற்றும் இடுப்பு வலி போன்ற அதிக பிரச்சனைகளை ஓமிக்ரான் பாதிப்பு மக்கள் எதிர்கொண்டனர். சமீபத்தில், குமட்டல், வயிற்றுக்கடுப்பு மற்றும் பசியின்மை போன்ற புதிதான சில அறிகுறிகள் சேர்க்கட்டிருந்தது. இப்படி, ஒவ்வொரு நாளும் மக்கள் எதிர்கொள்ளும் புதிய புதிய அறிகுறிகளை ஆராச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து மீண்டவர்களிடமும் நீண்ட கால முதுகுவலி காணப்படுகிறது.
இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களில் தசை வலி பிரச்சனையும் காணப்படுகிறது. சிலர் சுவை இழப்பு, முதுகு, மற்றும் இடுப்பில் வலி இருப்பதாகவும் புகார் கூறுகின்றனர். இது நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையெல்லாம் குறிப்பிட்டு, உலக சுகாதார அமைப்பின், மரியா வான் கெர்கோவ், ஓமிக்ரான் போன்ற புதிய மாறுபாடுகளை கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கொரோனா பாதிப்படைந்த 90 நாட்கள் கழித்து நீண்ட கால பாதிப்புகளின் அறிகுறிகள் தோன்றும் என்றார். மேலும், இந்த நீண்ட கால விளைவுகள் சில வாரங்களாக இருக்கலாம், சில மாதங்கள் ஆகலாம், சில வருடங்களாக இருக்கலாம். அது என்னவென்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றார்.
இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் பேசிய போது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் மெல்ல குறையும் என்றும், ஒமைக்ரான் வீரியம் அதிகரித்து புதிய வகைகள் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாத நபர்களுடன் ஒப்பிடும்போது, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு இருக்கும் அறிகுறிகள் அத்தனை தீவிரமாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தி, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, தனிமை போன்ற விஷயங்கள்தான் தீவிர பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ளுங்கள். மேலும், கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டில் பொதுமக்கள் அலட்சியம் காட்ட, வேண்டாம் என்பதே மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த கருத்தாகும்.