ஐந்து நிமிடத்தில் முகத்தில் உள்ள சிறு ரோமங்களை நீக்குவது எப்படி ..?
ஐந்து நிமிடத்தில் முகத்தில் உள்ள சிறு ரோமங்களை நீக்குவது எப்படி ..?
முகம் பளபளப்பாக இருந்தால் தான் நம் அழகு வெளிப்படும்...எப்போதும் நம் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்றால்,பலரும் கெமிகல்ஸ் கிரீம் பயன்படுத்துகின்றனர்.
அவ்வறு பயன்படுத்துவதால்,நம் முகம் விரைவில் சுருக்கம் அடையும், இயற்கையான அழகு மறைந்து போகும்..
அதற்கு பதிலாக வீட்டிலேயே நல்ல அற்புதமான ஒரு முறையை பயன்படுத்தி,முகம் பளபளப்பாக வைத்துக்கொள்வதுடன்,முகத்தில் உள்ள சிறு சிறு ரோமங்களை அகற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம்..?
பேஸ்பேக்
கிராம் பிளார் ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்
பால்
மஞ்சள் தூள்
எலுமிச்சை சாறு
இவை அனைத்தும் ஒன்றாக நன்கு பசை போன்று தயாரித்து வைத்து கொள்ளவும்.
பின்னர், நல்ல வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவிவிட்டு,இந்த பசையை அப்ளை செய்யவும்....
பின்னர் ஐந்து அல்லது பத்து நிமிடம் வரை காத்திருந்து,நன்கு காய்ந்த பின்னர் முகத்தை கழுவி,காட்டன் துணியால் ஒத்தி எடுக்கவும்
பின்னர் உங்கள் முகம் பளபளப்பாகவும்,பொலிவுடனும்,சிறு சிறு ரோமங்கள் நீங்கி மிகவும் அழகாக காணப்படும்.
இயற்கை பொருட்களை கொண்டு....இயற்கையாவே அழகை பேணி காக்கலாமே....