Asianet News TamilAsianet News Tamil

திடுதிடுப்பென்று உயர்ந்த சவரன் விலை..? பொங்கி எழும் மக்கள்...!

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை மெல்ல மெல்ல உயர தொடங்கியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது.

gold rate high as on 6th feb 2020
Author
Chennai, First Published Feb 6, 2020, 5:18 PM IST

திடுதிடுப்பென்று உயர்ந்த சவரன் விலை..?  பொங்கி எழும் மக்கள்...!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, பெரும் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு ரூ.1 அதிகரித்து 3838.00 ரூபாய்க்கும்,சவரனுக்கு 8 ரூபாய் 30 ஆயிரத்து 704 ரூபாய்க்க விற்கப்பட்டது.

இந்த நிலையில் மாலை நேர நிலவரப்படி,கிராமுக்கு ரூ.24 கிராம் உயர்ந்து 3862.00 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை மெல்ல மெல்ல உயர தொடங்கியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்ட நிலையில் தற்போது சற்று குறைந்து உள்ளது. மேலும் தற்போதைய  நிலவரப்படி, செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக எப்போது தான் சவரன் விலை குறையுமோ என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. 

gold rate high as on 6th feb 2020

மேலும் வருகிற மாதங்களில் சுப  காரியங்கள் அதிகம் நடக்க உள்ளதால், தங்கத்தின் தேவை  தவிர்க்க முடியாததாக கருதப்படுகிறது. எனவே  மக்களின் தேவையை பொறுத்து தங்கம் விலை மீண்டும் உயர் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது . 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 10 பைசா குறைந்து 49.80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios