பேச்சுலர்ஸ்கு ஈசியான இஞ்சி ஊறுகாய்........!!!

ஊருகாய் என்றாலே நாவூறும் ......எது இருக்கோ இல்லையோ.....பழைய சாதமும் ஊரூகாயும் இருந்தாலே போதும் நமக்கு.......

உண்மையில் இந்த உணவு நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.......

தேவையான பொருட்கள் :

இஞ்சி - 1 கப்

மிளகாய் தூள் - கால் கப்

மல்லித் தூள் - கால் கப்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

வெல்லம் - அரை கப்

புளி - 1 எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

பூண்டு - 10 பற்கள்

தாளிக்க :

எண்ணெய் - ½ கப்

கடுகு - 1 மேஜைக்கரண்டி

சீரகம் - 1 மேஜைக்கரண்டி

வத்தல் மிளகாய் - 5

பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கைப்பிடியளவு

செய்முறை :

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 வெல்லத்தை துருவிக் கொள்ளவும்.

 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி இஞ்சியை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆற வைக்கவும்.

ஆறியவுடன் இஞ்சி, புளி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அதனுடன் உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

 சுவையான இஞ்சி ஊறுகாய் ரெடி!!!!!