12 வயது அழகிய பெண்ணை பிராய்லர் கோழியாக மாற்றிய பிரான்ஸ் கிழவர்...!
12 வயது அழகிய பெண்ணை பிராய்லர் கோழியாக மாற்றிய பிரான்ஸ் கிழவர்...!
புதுவையில்,பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே...
தயாரி கக்னர் என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயதான முதியவர், ஓடிசாவை சேர்ந்த சிறுமி ஒருவரை சில ஆண்டுகளாக தன்னுடைய இல்லத்திலேயே வளர்த்து வருகிறார்.
அந்த சிறுமிக்கு தற்போது வயது 12 மட்டுமே. ஆனால் இந்த முதியவர் கிரிமினலாக யோசனை செய்து,அந்த பெண்ணை அடைய வேண்டும் என்பதற்காக தினமும் ஹார்மோன் மாத்திரை கொடுத்து வந்துள்ளார் .
இதன் காரணமாக குழந்தை போல் தோற்றமளிக்க வேண்டிய அந்த சிறுமி, தற்போது 25 வயதான குமரி போல் ஆகி உள்ளார்.
இந்த பெண்ணை தினமும் அந்த முதியவர் தன் அருகிலேயே படுக்க வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.
இதே வீட்டில் அந்த பெண்ணின் தாயும் சில ஆண்டுகளாக வேலை செய்து வருவதால், இதனை அறிந்ததும் மிகவும் வேதனை பட்டு உள்ளார்.
ஆனால் இதனை வெளியில் கூற வேண்டும் என்றால்,அந்த முதியவரின் மீதுள்ள பயம் தடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் அவருக்கும் மொழி வேறுபாடு உள்ளதால்,வேறு யாரிடமும் விளக்கமாக உண்மையை சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக துணை நிலைஆளுநர் கிரண்பேடிக்கு புகார் ஒன்றை அனுப்பி உள்ளார் விவரம் தெரிந்த ஒருவர்.
பின்னர் அதிரடியாக களமிறங்கிய குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் தலைவி வித்யா ராம் குமார்,அந்த வீட்டில் சோதனை நடத்தி,சிறுமியிடம் விசாரணை செய்ததில், இதுவரை அந்த பெண்அனுபவித்து வந்த அனைத்து இன்னல்களையும் கூறி உள்ளார்
பின்னர் அஜால் குஜாலுக்கு ஆசைபட்டு, சிறுமியை பிராய்லர் கோழி போன்று ஹார்மோன் மாத்திரை மற்றும் ஊசி போட்டு வந்த அந்த பிரான்ஸ் நாட்டு கிழவரை புதுவை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், அனைவரையும் பெருமூச்சி விட வைத்துள்ளது.