for gents also introduced tablets for non pregnant

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை.....! இனி அது வேண்டாம்...

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குழந்தை பிறப்பை தடுக்க அல்லது ஒத்தி வைக்க தம்பதிகள் பலர் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவார்கள்

கருத்தடை மாத்திரை என்றாலே, பெண் இணை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என நிலை இருந்தது......

பெண்களை பொறுத்தவரை...

புதுமண தம்பதிகள் சில ஆண்டுகளுக்கு குழந்தை பிறப்பை தள்ளி வைக்க முயற்சி செய்வார்கள்... அதன் பேரில் சில கருத்தடை மாத்திரைகளை பெண்கள பயன்படுத்துவதும்,அல்லது ஆண்கள் காண்டம் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.

அதே போன்று,தாம்பதயதில் ஈடுபட்ட பிறகு, 24 மணி நேரத்தில் கருத்தடை மாத்திரைகளை பெண்கள் எடுத்து வந்தனர். இவ்வாறு மாத்திரை எடுப்பது கரு உருவாவதை தடுக்கும்

ஆண்களை பொறுத்தவரை...

காண்டம் பயன்படுத்துவது அல்லது பெண்களின் மாத விலக்கை பொருத்து ஒரு குறிப்பிட்ட சில நாட்களில் தாம்பத்யம் வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.இந்நிலையில் புதியதாக ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை வந்துள்ளது.

டைமெதன்ரலோன் அன்டிகொனேட் அல்லது டிஎம்ஏயூ என பெயரிடப்பட்டு உள்ளது

இந்த மாத்திரைகளை தேவைக்கு ஏற்ப தினமும் ஒரு மாத்திரை அளவு எடுத்துகொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனராம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மாத்திரிகளை ஆண்கள் எடுத்துக் கொள்ளலாம்

இதனால்எந்த பக்க விளைவுகளும் ஏற்படாதாம்....18 வயது முதல் 50 வயது வரை நல்ல ஆரோக்கியமாக உள்ள பல ஆண்களுடன் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இதனை நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.