ear grown in the hand in china



கடந்த 2015ல் நடந்த விபத்தில், ஜி என்பவர் தனது காதை இழந்துள்ளார்.இந்த சம்பவம் நடந்த இடம்  சீனாவின்  சியான்  நகரத்தில்  என்பது குறிப்பிடத்தக்கது .

இதனை  தொடர்ந்து  அவருக்கு எப்படியாவது காது பொறுத்த வேண்டும் என முடிவு  செய்த சீன  மருத்துவர்கள் , இதற்காக , அவருடைய கையில் செயற்கையான முறையில்  ஒரு  காதை வளர்த்து , அதை  அவருக்கு  பொருத்தி , தற்போது அவருக்கு  அருமையாக  காது கேட்கிறதாம் .

எப்படி சாத்தியம் ?        

விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து 3 – டி தொழில் நுட்பத்தை  பயன்படுத்தி, அவரது  கையில்  காதை வளர்த்து வந்தனர் .கிட்டத்தட் 4  மாதங்களாக செயற்கையான முறையில்  வளர்க்கப் பட்ட  அந்த  காது,  ஒரு கட்டத்தில்  நல்ல  உணர்வுடன்  செயல்பட்டதை தொடர்ந்து,  அவர் கையிலிருந்து அந்த காதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பின்னர் ,  காது இருக்குமிடத்தில்  7 மணி  நேரம்  சவாலாக  போராடி  பொருத்தியுள்ளனர்  சீன  டாக்டர்கள். தற்போது  அந்த  ஜி  என்கிற நபர் நல்ல ஆரோக்கியமான முறையில், காது கேட்பதை உணர முடிகிறது  என  தெரிவித்துள்ளார்