அதற்கும் போலி 2,000 ரூபாயா...!!!! யார் ? எங்கே ? எப்படி?....அதிர்ச்சியில் மக்கள் ...!!!!
கர்நாடக மாநிலத்தில் போலி 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் தலையெடுக்க தொடங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதாவது, கர்நாடக மாநிலம் சிக்மகளூர் என்ற பகுதியிலுள்ள மார்கெட்டில் போலி 2ஆயிரம் நோட்டை மர்மநபர் யாரோ மாற்றி சென்றிருக்கிறார்.
யார் ?
மார்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் அசோக், இவரிடம் காய்கறி வாங்க வந்த நபர் இந்த போலி ரூபாய் கொடுத்துள்ளார்.
எப்படி ?
அந்த போலி 2ஆயிரம் ரூபாய் நோட்டானது கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு முன்பக்கமும், பின்பக்கமும் ஒன்றோடு ஒன்று ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.
நடந்தது ?
இதனை போலி ரூபாய் என அறிந்த அந்த வியாபாரி, அந்த நோட்டை வாடிக்கையாளரிடமே திரும்ப கொடுத்துள்ளார்.
விசாரணை
போலி 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உலவுவது குறித்து அப்பகுதி போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது......
புது நோட்டை வெளியிட்டு , இரண்டு நாட்களே ஆன நிலையில், அதற்குள் திருட்டு பயலுங்க....கைவரிசை காமிக்க தொடங்கியுள்ளனர் ........
இந்த சம்பவம் , பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது........
