உப்பில்லாத  பண்டம் :

“உப்பில்லாத  பண்டம்  குப்பையிலே “ என்ற  பழமொழி  அனைவருக்கும் தெரியும்.  அந்த அளவுக்கு  உப்பின் அருமை உண்டு. உப்பு இல்லாமல் எந்த உணவையும் நம்  வாயில் கூட  வைக்க  முடியாது என்பது  உண்மை .

லட்சுமி  கடாட்சம் :

செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள் என்பதால், லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது என்பதால், இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது என்பது நமக்கு தெரிந்த  விஷயம் தான்.

கிரகப் பிரவேசம் :

எனவே தான் கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை  உப்பு ?

இத்தனை சிறப்பு வாய்ந்த உப்பை , அதாவது  லட்சுமி   தேவிக்கு  உகந்த  வெள்ளிக்கிழமை, உப்பை வாங்கினால்,   பொன்னும் பொருளும்  சேரும்  என்பது  ஐதீகம் ....