divorve is the end point? no



டைவர்ஸ் தான் முடிவா என்ன ?

திருமண  வாழ்க்கை

திருமணம்  என்பது இரு மனங்கள்  இணைவதே. இரு மனங்கள்  இணைந்தால்  தான்  அது திருமணம்.

இத்தகைய  சிறப்பு வாய்ந்த திருமணம்  நடந்த பின், அதே  மகிழ்ச்சி  நீடிக்கிறதா என்றால்  சற்று கேள்விக்குறியாகி விடுகிறது .  கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு , ஈகோ , சின்ன சின்ன  சண்டைகள் என  இதெல்லாம் காரணமாக  அமைந்துவிடுகிறது  தம்பதிகள் பிரிவதற்கு ...!

கணவன்  குறித்த எதிர்மறை எண்ணங்களை  மனைவி  நினைப்பதும் ,  மனைவி குறித்த  எதிர்மறை எண்ணங்களை கணவன் நினைப்பதும் , பின்னர்  வாய்த்தகராறு  முற்றி   பிரச்சனையில்  முடிகிறது .

இதற்கு அடுத்தகட்டமாக ,  கணவன்  மனைவி  இடையே   உள்ள , பிரச்சனையை  தீர்த்து  வைப்பதற்காக ஒரு  பஞ்சாயத்து வேற. இதையெல்லாம்  கடந்தாலும்  மீண்டும்  உருவெடுக்கும்  பிரச்சன்னை .

என்னதான் தீர்வு ?

தொடர்ந்து கணவன் மனைவி இடையே  பிரச்னை இருந்துக் கொண்டே இருந்தால் எப்படி வாழ்கை நடத்துவது என  நினைத்து,  வக்கீலுக்கு  வேலை குடுக்க  ஆரம்பிக்கிறோம் .

எப்படியோ ஒரு வழியா  செட்டில்மென்ட்  நடக்கும் ,டைவர்ஸ்  கிடைக்கும் .....இருவரும்  இரு வேறு  திசையில்  பயணிக்க  தொடங்க தயாராகுகிறார்கள் . இதற்கிடையில்  அவர்கள்  குழந்தைகளை  பற்றி  கூட  கவலை பட  நேரமிருக்காது , அந்த அளவுக்கு  மன உளைச்சலுக்கு  ஆளாகி  இருப்பார்கள் .

இதிலிருந்து என்னப் தெரிகிறது ..?

கஷ்டமோ நஷ்டமோ ...... எல்லோருமே  ஒவ்வொரு விதத்தில் தவறு செய்கிறோம். தவற்றை திருத்திக் கொண்டு  மனம் போன போக்கில்  செல்லாமல்,  தன் துணையுடன்  பேசி , எதார்த்தமாக  வாழ  முடிவெடுப்பதே  நல்லது .

 கணவன்  மனைவி இருவரும் ஒரு நாளைக்கு   அரை  மணி நேரமாவது அமர்ந்து பேசுங்கள். பணம்  பணம்  என பேசுவதற்கு கூட நேரமில்லாமல்  ஓடி கொண்டே  இருந்தால் , திருமண   வாழ்க்கையில் என்னதான்  இருக்கிறது என  வெறுப்பு வர  தொடங்கி விடும் . அதற்கான  இடத்தை  நாம்  எப்பொழுதும்  தரவே  கூடாது .

மனதோடு  ஒன்றி ,கடைசி வரை ஒன்றாக வாழ  வேண்டும் என்பதே  அனைவரின் விருப்பமும்