உங்கள் கார் மழையில் வெள்ளத்தில் மூழ்கி விட்டதா? பழைய நிலைக்கு கொண்டு வர இத செய்யுங்கள்..!
உங்கள் கார் மழையில் வெள்ளத்தில் மூழ்கினால் அதனை பழைய நிலைக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.
![car care tips for what to do if your car has flooded in rain in tamil mks car care tips for what to do if your car has flooded in rain in tamil mks](https://static-ai.asianetnews.com/images/01f87hwzvxq6dzss691nr9c90x/1-jpg_363x203xt.jpg)
இந்தியாவில் மழைக்காலத்தில் வெள்ளம் வருவது மிகவும் பொதுவானது. பெரும்பாலான நகரங்களில், தெருக்கள் மென்மையான நீரோடைகளாகவும், விரைவாக பொங்கி எழும் நதிகளாகவும் மாறுவதற்கு கனமழை மட்டுமே காரணம்.
இந்நிலையில் சென்னையில், பெய்த கனமழையின் வெள்ளத்தில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. மேலும் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுள் வெள்ள நீர் புகுந்தது. அதுமட்டுமின்றி, அவர்களின் கார்களை முழ்கடித்தும், நீரில் அடித்துச்சென்றது. அவ்வாறு உங்கள் காரும் மழை வெள்ளத்தில் முழ்கி சேதமடைந்திருந்தால், உங்கள் காரை மீண்டும் உயிர்ப்பிக்கும் செயல்முறையைப் பெற உதவும் சில வழிகள் இங்கே உள்ளன. அவை..
இதையும் படிங்க: Car Care Tips : அடைமழையிலும் காரை பராமரிக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!!
உங்கள் கார் வெள்ளத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?
இதற்கு முதலில் உங்கள் காரில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
எக்காரணம் கொண்டும் உங்கள் காரை ஸ்டார்ட் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் காரில் இருக்கும் தண்ணீர் என்ஜின் மற்றும் பிற பாகங்களுக்கு சென்று மேலும் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தலாம்.
அதுபோல், உங்கள் காரின் பேனட்டை திறந்து இரண்டு பேட்டரி ட்ர்மினல்களை ஸ்பேனர் கொண்டு கழற்றிவிடுங்கள். உங்களுக்கு தெரிந்திருந்தால் மட்டுமே இதை செய்ய வேண்டும்.
உங்கள் காரின் இஞ்சினை காய வைக்க வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். அப்போதுதான் அது நன்கு காயும். அதுவரை அதனை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்.
நீர் சேதம் மிகவும் கடுமையானதாக இருக்கும், குறிப்பாக உலோகம் மற்றும் மின் கூறுகளுக்கு. வாகனம் முழுவதும் காற்று செல்ல அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்க வேண்டும். இது பூஞ்சை மற்றும் பூஞ்சை வளர்வதை நிறுத்தும்.
உங்களால் முடிந்தால், காரின் இருக்கைகளை அகற்றி, வெயிலில் காய வைக்க வேண்டும். இதனால் கேபினுக்கு அதிக காற்றோட்டம் கிடைக்கும்.
ஒருவேளை உங்களுக்கு கார் அவசியமாகத் தேவைப்படுகிறது என்றால், உங்களுக்கு தெரிந்த மெக்கானிக்கை தொடர்பு கொண்டு, காரை சரி செய்யுங்கள்.
மேலும் உங்கள் காரை டோ செய்து, இஞ்சினை ட்ரை க்ளீன் செய்த பிறகு தான் நீங்கள் காரை பயன்படுத்த வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D