சிக்கன் :

நம்ம தாத்தா சாப்பிட்ட சிக்கனுக்கும், இன்று நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் சிக்கனுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன . பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு சிக்கன் . ஆனால் , அது இன்று உயிரைக் கொள்ளும் ஸ்லொ பாய்சன் உணவாக மாறி வருகிறது .

உட்செலுத்தும், ஆன்டி-பயாடிக்ஸ் :

 சிக்கனில் அதன் கருவூறுதல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆன்டி-பயாடிக்ஸ் அதிகளவில் செலுத்துகின்றனர் . இது கோழியின் ஆரோக்கியத்தையும் சீரழித்து, அதை சாப்பிடும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது என்பது தான் உண்மை ....

பெரிதாக வளர :

1950-களில் இருந்த கோழிகளை விட இன்று இருக்கும் கோழிகள் நான்கு மடங்கு உருவில் பெரிதாக இருக்கிறது . மேலும் , ஒரு ஆய்வில் அன்றைய கோழிகளை காட்டிலும் இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகரித்து காணப்படுகிறது என அறியப்பட்டுள்ளது .

மாத்திரை / மருந்து :

மருந்துகள் மூலமாக கோழியின் ஹார்மோனில் ஏற்படுத்தப்படும் மாற்றம் தான் இதற்கான காரணமாக இருக்கிறது . இதை வியாபாரம் மற்றும் லாபம் அதிகம் காண உற்பத்தியாளர்கள் பின்பற்றுகின்றனர் .

ஆர்சனிக் :

ஆர்சனிக் என்பது ஒருவகை ரசாயனம் . இதை இன்று உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர் . இதை அரசு அறிவுரைக்கு அதிகமான அளவில் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் . இது மனித உடலுக்கும் , ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

நெஞ்சு முழுக்க நஞ்சு

சிக்கனில் நெஞ்சு பகுதி அனைவரும் விரும்பி உண்ணும் பாகம். ஆனால் , இன்று நாம் சாப்பிடும் சிக்கனின் நெஞ்சு பகுதி 97% பாக்டீரியா தாக்கம் நிறைந்து இருக்கிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது இதுவும் நமது ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஒன்று தான் .

ஆகையால் நாம் பிராய்லர் கோழிகள் அதிகளவில் சாப்பிடுவதை தவிர்த்திடல் வேண்டும்