பாடி பில்டர்களுக்கு தாய்ப்பால்...! சூடு பிடிக்கும் பிசினஸ்...!
பாடி பில்டர்களுக்கு தாய்ப்பால்...! சூடு பிடிக்கும் பிசினஸ்...!
குழந்தைகளுக்கு தாய்பாலை விட மிக சிறந்த அமிர்தம் எதுவும் கிடையாது அல்லவா..?
அந்த தாய்பாலை தற்போது வியாபார நோக்குடன் பாடிபில்டர்களுக்கு விற்கப்படும் சம்பவம் அரங்கேறி உள்ளது
சைப்ரஸ் நாட்டைசேர்ந்தவர் ராபெலாலாம்ப்ரூ,இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய். தற்போது தன்னுடைய இரண்டாவது குழந்தையை ஈன்றெடுத்த இவர்.தன் குழந்தைக்கு கொடுத்தது போக,மீதம் சுரக்கம் அதிக படியான பாலை அக்கம் பக்கம் உள்ள மற்ற குழந்தைகளுக்கு கொடுத்து வந்துள்ளார்.
பாடி பில்டர்களுக்கு
இந்நிலையில்,தாய்ப்பால் என்பது மிக சிறந்த அமிர்தம் என்பதாலும்,அதனை பாடி பில்டர்கள் எடுத்துக் கொண்டால்,அவர்களுடைய தசை நார்கள் வலுவடையும் என கூறி, ஒரு அவுன்ஸ் தாய்பால் ரூ.80 க்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்த தகவல் அறிந்த பாடி பில்டர்கள், இவரிடம் வந்து அதிக விலைக்கு தாய்ப்பால் விற்று வருகிறார்...அதுமட்டுமிள்ளம்னால்,பேஸ்புக் மூலம் தனி பேஜ் உருவாக்கி அதில், இது குறித்து பதிவிட,பல வாடிக்கையாளர்கள் கிடைப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
மேலும், இது குறித்து அவர்தெரிவிக்கையில்,"இந்த வியாபாரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு என்றும்,ஆனால் எவ்வளவு நாளாக இதனை என்னால் செய்ய முடியும் என தெரியவில்லை என தெரிவித்து உள்ளார்
மேலும்,தாய்ப்பால் மூலம் இதுவரை 4 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். மனைவியின் இந்த செயலுக்கு அவருடைய கணவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்