சென்னையில்  மாரத்தான்....! கலந்துக்க ரிஜிஸ்டர்  பண்ணுங்க .......!!!

சென்னை சூப்பர் ரன்னர்ஸ் என்ற  அமைப்பு ,  மரங்கள் குறித்த  விழிப்புணர்வை மக்களிடையே   ஏற்படுத்தும் வகையில் , வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாரத்தான்  நடைபெற உள்ளது.

இதில் 5 வயது  சிறுவர்கள்  முதல்  பெரியவர்கள்  வரை அனைவரும் பங்கேற்கலாம் என்பது குறிபிடத்தக்கது. மேலும்,  பெண்கள் ஆண்கள் என  இரு பிரிவினருக்கும் தனித்தனியே  மாரத்தான்  நடைபெற   உள்ளது. இதில் கலந்து  கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.

 நடைப்பெறும் இடம் :

சென்னை அடையாறில் உள்ள குமார ராணி மீனா முத்தையா கலைக் கல்லூரி மைதானத்தில் மாரத்தான் போட்டியை நடத்துகிறது.

மொத்த பரிசுத்தொகை :

மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000. இதில் சிறுவர்களுக்கு/ஆண்களுக்குத் தனியாகவும், சிறுமிகள் / பெண்களுக்குத் தனியாகவும் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2500, இரண்டாம் பரிசு ரூ.1500, மூன்றாம் பரிசு ரூ.1000. இந்த போட்டியில் பங்கெடுக்க www.marathonchennai.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்பது  குறிபிடத்தக்கது.