சென்னையில் வீடு வீடாக சென்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 1222 பேருக்கு காய்ச்சல் இருமல் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் வீடு வீடாக சென்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 1222 பேருக்கு காய்ச்சல் இருமல் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வேகமெடுத்து உள்ள கொரோனா பாதிப்பு சென்னையில் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருக்கின்றதா என வீடு வீடாக சென்று சோதனை செய்தனர் மாநகராட்சி ஊழியர்கள். கடந்த கடந்த மார்ச் 5ஆம் தேதி தொடங்கிய இந்த பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இவ்வாறு மேற்கொண்டதில் யாருக்கெல்லாம் நீரிழிவு ரத்த அழுத்தம் நோய் இருக்கின்றது என்பதையும், சளி இருமல், காய்ச்சல் போன்றவற்றால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதனையும் கணக்கெடுத்து சுகாதார அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர் .